தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.
சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான். தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிரதாப்தம் என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடைந்ததால் உடன் இறந்தவர்கள் சதி செய்து ஏமாற்றி சென்றனர் . இதனை அடுத்து விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது வீடு சொத்துக்களை விற்று மேலும் மேலும் படங்களை தயாரித்தவர் இறுதி காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து கடனில் சிக்கினார்.
தொடர் தோல்விகளால் காதல் கணவர் ஜெமினி கணேசனோடும் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் . தொடர் நஷ்டம், சினிமா வாய்ப்புகள் இல்லாமை என விரக்தியில் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் அவர் குடிக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். இதனால் அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு ஆளே உருமாறியுள்ளார்.
நல்ல ஆரோக்யமான தேகத்துக்கு படங்களில் நடித்து வந்த அவர் இறுதிகாலத்தில் மிகவும் ஒல்லியாகி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக பாக்யராஜ் ஒரு நேர்காணலில் கூறிய தகவல் குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் முதல் முதலாக ஏழை பணக்காரன் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அந்த படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் சாவித்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பாக்யராஜை இயக்குனர் சாவித்ரியை போய் அழைத்து வா எனக் கூறியுள்ளார். சாவித்ரியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் அவர் அறைக்கு சென்றுள்ளார் பாக்யராஜ். அவர் அறைக்கு சென்று பார்த்தால் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு ஒல்லியாகிக் காணப்பட்டுள்ளார்.
அவரைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சுவராமல், கண்கள் கலங்க நின்றுள்ளார் பாக்யராஜ். அவரிடம் ‘என்ன’ என்று கேட்டுள்ளார் சாவித்ரி. ஒன்றுமே பேசமுடியாமல் சில வினாடிகள் பிரமை பிடித்தது போல நின்ற பாக்யராஜ் அப்புறம்தான் ‘ஷாட் ரெடி. டைரக்டர் கூப்பிடுறார்’ எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…