Categories: CINEMA

பாக்யராஜை சுட துப்பாக்கியை எடுத்த தயாரிப்பாளர்… ‘என் ரத்தத்தின் ரத்தமே’ பட backstory தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் “தூறல் நின்னு போச்சு”. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்யராஜை முன்னணி நடிகர் ஆக்கியது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கமே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

எம் ஜி ஆர் வேறு, தன்னுடைய கலையுலக வாரிசு என பாக்யராஜை அழைத்ததால் எம் ஜி ஆரின் ரசிகர்களும் அவருக்கு ரசிகர்களாக மாறினர். அப்போது அவருக்கு சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து நிலையான மார்கெட் இருந்தது. எம் ஜி ஆர் இறந்திருந்த சமயம், அப்போது பாக்யராஜ் கட்சியும் ஆரம்பித்திருந்தார்.

அந்த நேரத்தில்தான் இந்தியில் சூப்பர் ஹிட் ஆன மிஸ்டர் இந்தியா திரைப்படத்தை அவரை வைத்து எடுக்கலாம் என்ற முடிவை எடுத்தார் தயாரிப்பாளர் பாலாஜி. இந்தி படத்தின் பெரும்பாலான காட்சிகளை அப்படியே வைத்துக் கொண்டு பாக்யராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் புதிதாக ஷூட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பட உருவாக்கத்தின் போதே பாக்யராஜுக்கும் தயாரிப்பாளர் பாலாஜிக்கும் முட்டல் மோதல் உருவாகிவிட்டது. இந்த படத்தை பாக்யராஜ்தான் இயக்கினார் என சொல்லப்பட்டாலும் டைட்டிலில் அவர் பெயர் வராது. கே விஜயன் பெயர்தான் இயக்குனர் என்று வரும். ஒருவேளை தோல்வியை முன்பே பாக்யராஜ் கணித்துவிட்டாரோ என்னவோ?

படம் ரிலீஸாகி அட்டர் பளாப் ஆனது. பாக்யராஜ் நடித்த ஒரு படம் இந்தளவுக்கு தோல்வி அடையுமா என்ற அளவுக்கு இருந்தது அதன் தோல்வி. இதனால் தயாரிப்பாளர் பாலாஜி, தோல்விக்குக் காரணம் பாக்யராஜ் செய்த மாற்றங்கள்தான் என அவரை சுட துப்பாக்கியை எடுத்து நீட்டியதாகவெல்லாம் அப்போது செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் பாக்யராஜ் அவருக்கு நஷ்ட ஈடு கொடுத்தாக சொல்லப்படுகிறது.

vinoth

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

8 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

5 மணி நேரங்கள் ago