பெங்களூரில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் திருநங்கை சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெங்களூருவின் விரட் நகரில் ஏழு திருநங்கை பெண்கள், 24 வயது ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அறிமுக நபருடன் வசித்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வேலைக்காக கே ஆர் புறம் சென்ற பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்கிருந்த நபருடன் இரவு தங்கி உள்ளார். அடுத்த நாள் நான்கு திருநங்கைகள் இரண்டு ஆட்டோக்களில் வந்து அவரை இழுத்து விரட் நகர் பகுதிக்கு அழைத்து வந்தனர்.
அவர்கள், நீங்கள் நம்முடன் மட்டுமே இருக்க வேண்டும், தனியாக வாழ முடியாது என்று எச்சரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் முடி நீக்கும் கிரீம் தடவி மொத்த முடியையும் நீக்கி மொட்டை அடித்தனர். மற்றவர்கள் குச்சிகள், பெல்ட் மற்றும் கயிறுகள் ஆகியவற்றால் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். மதியம் முதல் அதிகாலை 3:00 மணி வரை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்த போது அவருக்கு உணவு மறுக்கப்பட்டதோடு மீண்டும் எதிர்த்தால் கொலை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM)…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு கோரிக்கை குறித்து விவாதிக்க, விடுதலைச்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எவருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம்…
திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, இன்று பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும், சிறந்த அப்பாவாகவும் மிளிர்பவர் நடிகர் மாதவன். தமிழ்,…