பெங்களூரில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் திருநங்கை சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெங்களூருவின் விரட் நகரில் ஏழு திருநங்கை பெண்கள், 24 வயது ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அறிமுக நபருடன் வசித்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வேலைக்காக கே ஆர் புறம் சென்ற பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்கிருந்த நபருடன் இரவு தங்கி உள்ளார். அடுத்த நாள் நான்கு திருநங்கைகள் இரண்டு ஆட்டோக்களில் வந்து அவரை இழுத்து விரட் நகர் பகுதிக்கு அழைத்து வந்தனர்.
அவர்கள், நீங்கள் நம்முடன் மட்டுமே இருக்க வேண்டும், தனியாக வாழ முடியாது என்று எச்சரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் முடி நீக்கும் கிரீம் தடவி மொத்த முடியையும் நீக்கி மொட்டை அடித்தனர். மற்றவர்கள் குச்சிகள், பெல்ட் மற்றும் கயிறுகள் ஆகியவற்றால் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். மதியம் முதல் அதிகாலை 3:00 மணி வரை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்த போது அவருக்கு உணவு மறுக்கப்பட்டதோடு மீண்டும் எதிர்த்தால் கொலை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
A 24 yr old #transgender woman was allegedly abducted,confined, and assaulted by members of her own community in #Bengaluru. Police have booked seven accused under various Sections of BNS 2023 and the Transgender Persons (Protection of Rights) Act, 2019. pic.twitter.com/KvsG9OHyrt
— Yasir Mushtaq (@path2shah) October 31, 2025
