சிவனின் மறு அவதாரமாக வரண ஆவஹர்ஷண பைரவர் திகழ்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் சிறிய அளவில் தெற்கு நோக்கிக் கால பைரவர் அமைந்திருப்பார். ஈரோட்டில் கால பைரவருக்கு ஒருக் கோவிலை கட்டி வைத்துள்ளனர். இந்தக் கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தான் தனிச்சிறப்பு. 39 அடியில் பிரம்மாண்டமாக காலப் பைரவரை அமைத்துள்ளனர். உடுக்கை, வேல், சூலம், அட்சய பாத்திரம் என நான்கு கைகளில் ஏந்தியவாறு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பைரவர் சிலை உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.
அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால் வறுமை நீங்கி வளம் பெறுகும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனை, எதிரிகள், பயம் இதுப்போன்ற அனைத்தும் நீங்கிவிடும். பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்கள் தான் உகந்தது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடலாம். அதேபோல் சித்திரை பரணி மற்றும் ஐப்பசி பரணி ஆகிய மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் பைரவருக்கு விசேஷ நாட்களாகும். பைரவர் பரணி நட்சத்திரத்தில் தான் பிறந்துள்ளார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியம், அதிகப்பலன் கிடைக்கும்.
தைமாத செவ்வாய் கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் நன்மை உண்டாகும். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கேடுகளை அளிக்கும். அதிகாலையில் குளித்துவிட்டு பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். விரத நாட்களில் எளிய உணவு சாப்பிடலாம். இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, அன்று பைரவருக்கு வடை மாலைச் சாற்றி வழிபடலாம் அல்லது விளக்கேற்றி வழிபடலாம்.
மறுநாள் காலை கோவிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் மிகவும் நல்லது. பௌர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். தீபம் ஏற்ற இலுப்பை எண்ணை, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், மற்றும் பஞ்ச தீப எண்ணெய் ஆகியவை உகந்ததாகும். அதேபோல் பஞ்ச தீப எண்ணெயில் விளக்கேற்றினால் நினைத்த காரியம் நிறைவேறும்.
