cow

பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பதால் இத்தனை பலன்களா…? எந்த நாளில் கொடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்…?

By admin on மார்கழி 4, 2024

Spread the love

இந்து மத வழிபாட்டில் பசுமாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பசுமாடு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டிலேயே கன்றுடன் இருக்கும் பசுமாடு கோமாதாவாக வழிபாடு செய்வார்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது என்பது நம் வாழ்வில் பலவிதா நன்மைகளை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதை பற்றி இனி காண்போம்.

   

பொதுவாக அமாவாசை நாட்களில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை பச்சரிசி வாழைப்பழம் கொடுப்பது நமக்கு தெரிந்த ஒன்று. அன்றைய தினம் கொடுப்பதற்கு காரணம் நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த பரிகாரத்தை செய்வார்கள். அமாவாசை தினத்தன்று இறந்த முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள்.

   

அது மட்டுமில்லாமல் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது நம் தீராத பாவங்கள் எல்லாம் தீரும். நீண்ட நாட்களாக திதி போன்றவைகள் கொடுக்காமல் இருப்பவர்கள் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது அந்த தோஷம் மற்றும் நம் கர்ம வினைகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது.

 

மேலும் குழந்தை வரம் வேண்டுகோர் வியாழக்கிழமை அன்று பசு மாட்டிற்கு தலை மற்றும் வால் பகுதியில் பொட்டிட்டு சந்தான லட்சுமி துதியை 16 முறை கூறி வம் வந்து வணங்கி அகத்திக்கீரை கொடுத்தால் அவர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்று கூறப்படுகிறது. பித்ரு தோஷம் இருப்பவர்கள் முதலாவதாக செய்யக்கூடிய முதல் பரிகாரம் பசு மாட்டிற்கு அகத்திக் கீரை கொடுப்பதுதான்.

எந்த ஜீவராசிகளுக்கும் உணவளிப்பது என்பது நமக்கு புண்ணியத்தை தரும். அது நம் சந்ததியில் அனைவரையும் வளமோடு வாழ வைக்கும். அதிலும் பசுமாடு லட்சுமி கடாட்சம் பொருந்தியதாக லக்ஷ்மியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. உங்களுக்கு ஏதேனும் தீராத கஷ்டங்கள் இருக்கும்போது பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை நீங்கள் கொடுத்து வரும் போது உங்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.