சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

By Soundarya on சித்திரை 16, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த யாரும் முன்வராத நிலையில், தாமே நேரடியாகக் களமிறங்கி வியக்க வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி பணியில் இருந்த பாதுகாப்புக் காவலர் ஒருவரைத் தேனீக்கள் கொடூரமாகத் தாக்கியதில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்த 7 பிரம்மாண்ட தேன்கூடுகளை நீக்க முதல்வர் முடிவு செய்தார்.

முதலில் மாவட்டத்திலுள்ள தேன்கூடு அகற்றும் நிபுணர்களை அவர் தொடர்பு கொண்டார். ஆனால், தேனீக்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு அஞ்சி யாரும் இந்தப் பணியை ஏற்க முன்வரவில்லை. எவருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கில், கல்லூரிக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை இதற்காக அவர் தேர்ந்தெடுத்தார். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிபிஇ (PPE) கிட் அணிந்துகொண்டு, சுமார் 5 மணிநேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்த ஆபத்தான தேன்கூடுகளை அவர் வெற்றிகரமாக அகற்றினார்.

   

   

ஒரு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்தபோதிலும், மற்றவர்களின் நலனுக்காகத் தாமே முன்வந்து இந்தப் பணியைச் செய்த டாக்டர் புகாரின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “யாரும் முன்வராதபோது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் களமிறங்குவதே ஒரு தலைவனுக்கு அழகு” என்பதை அவர் நிரூபித்துள்ளார். தற்போது தேனீக்களின் பயமின்றி மாணவர்கள் நடமாட முடிவதுடன், முதல்வரின் இந்தத் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.