#image_title
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கியவர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஏழாவது மனிதன் திரைப்படம் 80 களில் அதிகமாக வந்த இடதுசாரி கருத்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகும்.
#image_title
இந்த படத்தின் மூலம் ஹீரோவாக ரகுவரனுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெறாததால் ரகுவரனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால்தான் அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த சிவா, சம்சாரம் அது மின்சாரம், புரியாத புதிர், அஞ்சலி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தன. ரஜினியோடு அவர் நடித்த பாட்ஷா திரைப்படம் அவரைப் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம்.
புகழின் உச்சியில் இருந்த அவர் போதைப் பழக்கங்களுக்கு ஆளானதால் அவரின் உடல்நலம் கெட்டுப் போனது. இதனால் அவரது மனைவி ரோஹினியும் அவரைப் பிரிந்தார். அந்த பழக்கங்களில் இருந்து அவர் விடுபட்டு வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய போது அவர் மாரடைப்பு வந்து காலமானார். தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை அவரின் 50 வயதுக்குள்ளாகவே இழந்தது.
#image_title
இந்நிலையில் கடைசி காலத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் பேசும்போது “நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறே நடிகன் ஆனதுதான். எங்கோ ஒரு ஊரில் கொஞ்சம் நிலத்தை வைத்துக் கொண்டு, அதில் பயிர் செய்து, அந்த பயிர் வளர்வதை பார்த்து சந்தோஷப்பட்டு, விளைவதை வைத்து கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, ஆடு மாடுகளை வளர்த்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி வாழ்வதுதான் வாழ்க்கை. நான் அதை இழந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…