நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். இதனைத் தவிர்த்து ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்து வங்கிகளுக்கு விடுமுறை என்பது மாறுபடும். இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதத்திற்கு முன்னதாகவே வங்கிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் மொத்தம் 21 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
அக்டோபர் மாதம் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் மாதத்தின் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் நாடு தழுவிய வங்கி விடுமுறையாக இருக்கும். மேலும், வெவ்வேறு மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபர் 1, 2, 3, 4, 6, 7, 10, 18, 20, 21, 22, 23, 27, 28, 31 ஆகிய தேதிகளில் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- அக்டோபர் 1 – திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், கேரளா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து வங்கிகளும் மகாநவமி, தசரா, விஜயதசமி மற்றும் துர்கா பூஜை காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 2 – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை, காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 3 – துர்கா பூஜையின் போது சிக்கிம் மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
- அக்டோபர் 4 – துர்கா பூஜை காரணமாக சிக்கிமில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
- அக்டோபர் 6 – திரிபுரா மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- அக்டோபர் 7 – வால்மீகி ஜெயந்தி மற்றும் குமார் பூர்ணிமா காரணமாக கர்நாடகா, ஒடிசா, சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
- அக்டோபர் 10 – இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்
- அக்டோபர் 18 – அசாமில் உள்ள அனைத்து வங்கிகளும் இயங்காது.
- அக்டோபர் 20 – தீபாவளி பண்டிகை, நரக சதுர்தசி மற்றும் காளி பூஜை ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு மகாராஷ்டிரா, ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், ஜம்மு, காஷ்மீர் மற்றும் பீகார் தவிர நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
- அக்டோபர் 21 – மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனைத்து வங்கிகளும் தீபாவளி அமாவாசை, லட்சுமி பூஜை, தீபாவளி மற்றும் கோவர்தன் பூஜை காரணமாக மூடப்பட்டிருக்கும்.
- அக்டோபர் 22 – குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தீபாவளி (பலிபிரதிபதா), விக்ரம் சம்வத் புத்தாண்டு, கோவர்தன் பூஜை மற்றும் லட்சுமி பூஜை காரணமாக வங்கிகள் இயங்காது.
- அக்டோபர் 23 – பாய் தூஜ், சித்ரகுப்த ஜெயந்தி, லட்சுமி பூஜை, பத்ரி த்விதியா, நிங்கோல் சகோபா காரணமாக குஜராத், சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
- அக்டோபர் 27 – சத் மஹாபர்வத்தை முன்னிட்டு மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்
- அக்டோபர் 28 – பீகார் மற்றும் ஜார்கண்டில் வங்கிகளும் இயங்காது.
- அக்டோபர் 31 – குஜராத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
