சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தனது தயாரிப்பிற்கு உரிய பாதுகாப்பு கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், படத்தை இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் சட்டவிரோதமாக வெளியிட அதிரடி தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், கடின உழைப்பில் உருவான திரைப்படங்கள் இவ்வாறு திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், திரையரங்கு உரிமையாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த தடையை விதிப்பதாகத் தெரிவித்தது.
