இளையராஜாவின் மிக பெரிய ரசிகரான இயக்குனர் “பால்கி” இளையராஜாவின் “சுயசரிதையை” (Biography) படமாக இயக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்டு இருந்தார். இந்த சுயசரிதை இளம் வயது இளையராஜாவாக நடிக்கப் போவது மாபெரும் நடிப்பு அரக்கன் “தனுஷ்” அவர்களை அமைக்க உள்ளதாக பால்கி தனுஷிடம் கேட்டிருந்தார், தனுஷும் இந்த விஷயத்தில் மிகவும் பெருமிதம் கொண்டு ஓகே சொல்லி இப்படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள.
இப்படத்தின் கதை முழுவதும் பால்கி எழுதி முடித்து படப்பிடிப்பு தொடங்குவதற்காக சில பல வேலைகளை ஆரம்பித்திருந்த நிலையில், தற்போது இளையராஜா தனுஷின் படத்தை இயக்கலாம் ஆனால் இயக்குனர் பால்கி வேண்டாம், வேற யாராவது வைத்து இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்,
அதற்காக அவர் பல இயக்குனர்களை தேடி வருகிறார், ஆனால் தனுஷ் தன்னிடம் இருக்கும் இயக்குனரான மாரி செல்வராஜ், அருள் மாதேஸ்வரன் இவர் இருவர்களையும் இளையராஜாவிடம் அனுப்பி கதை சொல்ல வைத்தாராம், தற்போது இளையராஜா யோசித்து வருகிறாராம், ஆனால் இளையராஜாவின் மிக பெரிய ரசிகரான “பால்கி” தான் இந்த சுயசரிதியை உருவாக்க நினைத்தார்,
ஆனால் இவரையே தற்போது இப்படத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகரான பால்கி அவர்கள் இப்படத்தை இயக்கினால் தான் படத்தின் சுயசரிதை மிக அற்புதமாக வரும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் இயக்குனர் தெரிவித்தாள் தான் என்ன நடக்கும் என்றே தெரியும்.
