#image_title
1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடல் வைரமுத்துவை திரையுலகில் அறிமுகப்படுத்தியது. அந்த பாடலின் உருவாக்கத்தின் போதே இளையராஜாவை வெகுவாகக் கவர்ந்தார் வைரமுத்து. இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
இந்நிலையில் பைரவி மற்றும் சூலம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம் பாஸ்கரின் மகனான பாலாஜி பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வைரமுத்துவுக்கு முதலில் பாடல் எழுத வாய்ப்புத் தந்தது என்னுடைய தந்தைதான். இளையராஜா சூலம் படத்தி பாடல்களை எழுதுவதற்காக வைரமுத்துவை ப்பாவிடம் அழைத்து வந்தார். அப்பாவும் எழுத சொன்னார். அழகாக எழுதி கொடுத்தார் வைரமுத்து. அதுதான் அவருக்கு சினிமாவில் முதல் பாடல். ஆனால் அதை வைரமுத்து வெளியில் சொல்வதில்லை.
பைரவி படம் முடிந்தவுடன் சூலம் என்ற படத்தை இயக்கி தயாரித்த என் அப்பா அப்போது சங்கர் கணேஷ் இசையில் புதுமுக பாடல் ஆசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தலாம் என வைரமுத்துவை பாடல்கள் எழுத வைத்தார். ஆனால் சூலம் படம் வெளியாகும் முன்னரே நிழல்கள் படம் வெளியாகி ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடல் ஹிட்டாகிவிட்டது. ஆனால் சூலம் படம்தான் தன்னுடைய முதல் படம் என்பதை வைரமுத்து யாரிடமும் சொல்லவேயில்லை. மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு நிழல்கள் தான் என்னுடைய முதல் படம்னு சொல்லறாரு.
இதனால் கடைசி வரை வைரமுத்து மேல் கோபத்தில் இருந்தாரார் என்னுடைய அப்பா. அதன்பிறகு தன வைரமுத்துவுக்கு எந்தவொரு படத்திலும் அப்பா வாய்ப்பு கொடுக்கல. இந்த செய்தியை நான் சொல்லி அவர் தெரிந்த பின்னர் அவரை அறிமுகப்படுத்தியது என்னுடைய அப்பா இல்ல நிழல்கள் படம் தான் என்று அவர் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் தன்னிடம் இந்த தகவலை தான் இறப்பதற்கு முன்புதான் சொன்னார் என்றும் கூறியுள்ளார் பிரபு.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…