எனக்கு குழந்தை சத்தம் கேட்டே ஆகணும்.. பாக்கியா வீட்டுல விசேஷமுங்கோ.. ஈஸ்வரி ரியாக்ஷன் என்ன?..

By Mahalakshmi

Published on:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்றாக இருப்பது பாக்கியலட்சுமி. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இன்றைய ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கின்றது. அதில் ஈஸ்வரி எழிலிடம் எனக்கு தெரியாது எப்படியோ இந்த வீட்டில் ஒரு குழந்தை சத்தம் கேட்டு ஆக வேண்டும் .

   

நீ தான் படம் எடுத்துட்டல இப்பயாவது ஒரு பிள்ளையை பெத்துக்கோ என்று கூறுகிறார் ஈஸ்வரி. இதே சமயத்தில் ராதிகா வாந்தி எடுக்கிறார். கோபி என்ன ஆச்சு என்று கேட்க வாங்க மெடிக்கல் போயிட்டு வரலாம் என்று கூப்பிடுகிறார். மெடிக்கலுக்கு சென்று பிரக்னன்சி கிட் ஒன்றை வாங்கி செக் செய்யும் போது இரண்டு கோடு வந்து விடுகின்றது. இதை பார்த்த கோபி ஷாக் ஆகிறார்.

விரைவில் பாக்கியலட்சுமி வீட்டில் மற்றொரு குழந்தை சத்தம் கேட்கும் என்று தெரிகின்றது. இந்த ப்ரோமோ வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் என்னடா சீரியல் எடுக்குறீங்க கல்யாணமாகி பேரன், பேத்தி எடுத்த வயசுல குழந்தையா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த செய்தியை ஈஸ்வரி கேட்டால் என்ன ஆகுமோ? என்பதுதான் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

author avatar
Mahalakshmi