விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தற்போது பரபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீரியல் தற்போது விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி யில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
தற்போது இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மிகப்பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரை கைப்பற்றியுள்ளார். இதற்காக அவர் இங்கிலிஷ் கற்றுக் கொள்ள இங்கிலிஷ் கோச்சிங் கிளாஸிற்கும் தற்பொழுது செல்கிறார். இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் கார் குறுக்கே நிற்கின்றது. எதிரே வந்த வண்டியின் ஓட்டுநர் கார் குறுக்கே நிற்பதாகவும், அதனை எடுத்தால் தான் வண்டியை அங்கே நிறுத்த முடியும் எனவும் கூறுகின்றார். இவை அனைத்தையும் கோபி அருகில் நின்று கண்டும் காணாதது போல் பார்த்த வண்ணம் இருக்கின்றார்.
இதனையடுத்து பாக்கியா “நான் எடுத்து விடவா” என எழிலிடம் கேட்கின்றார். அதற்கு அவர் “நீயா அம்மா” என அதிர்ச்சியுடன் கேட்கின்றார். எனக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்ததே நீ தானே எனக் கூறி விட்டு பாக்கியா காரை எடுத்து விட செல்கின்றார். இதனைப் பார்த்ததும் கோபி அதிர்ச்சியடைகின்றார்.
பின்பு காரில் ஏறிய பாக்கியா வண்டியை ஓட்டுகின்றார். வேண்டுமென்றே கோபி குறுக்கே நின்றதைப் பார்த்து விட்டும் கவனிக்காதது போல் காரினால் மோத செல்கின்றார். அதற்கு கோபி சற்று பயந்து விட்டு ஓரமாக தள்ளி நிற்கின்றார். இவ்வாறு இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ….
தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…
தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…
பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…