பாலச்சந்தர் சார் ரஜினிய அறிமுகப்படுத்தக் காரணமே இதான்… அட ஆமல்ல- மிமிக்ரி பிரபலம் சொன்ன சூப்பர் தகவல்!

By vinoth on மாசி 27, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

   

1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

   

 

இந்நிலையில் அபூர்வ ராகங்கள் படத்திற்காக ரஜினியை பாலச்சந்தர் தேர்வு செய்த போது இரண்டே இரண்டு அறிவுரைகளை மட்டும் வழங்கினாராம். அதில் “நீ வேகமா பேசுறது , ஸ்டைலா நடக்குறது எல்லாமே எனக்குப் புடிச்சுருக்கு. ஆனா உன்னோட தமிழ் சுத்தமா நல்லா இல்ல. அதனால சீக்கிரமா தமிழ் கத்துக்கோ” என சொன்னாராம்.

இந்நிலையில் இப்போது மிமிக்ரி கலைஞரான படவா கோபி ரஜினியின் வித்தியாசமான தமிழ் பற்றி பேசியுள்ளார். அதில் “கன்னடர்கள் பேசும்போது கொஞ்சம் வேகமாகவும் சில வார்த்தைகளையும் இழுத்தும் பேசுவார்கள். அதே டோனில் ரஜினி சார் தமிழைப் பேசினார். அதுதான் அவருக்கு அடையாளமாகவும் அமைந்தது. அந்த ஸ்லாங்குக்காகதான் பாலச்சந்தர் சார் ரஜினியின்பால் கவர்ந்திழுக்கப்பட்டிருப்பார்.” எனக் கூறியுள்ளார்.