வீட்டுக்குள்ளே நுழைந்து சித்து வேலையை ஆரம்பித்த மாலினி.. ‘வெளிய போடி’ன்னு சொன்ன பாக்கியா… பரபரப்பாக வெளிவந்த ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ…

By Begam on அக்டோபர் 22, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ இந்த சீரியலில் தனது குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணாக பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார் . கணவரால் துரோகம் செய்யப்பட்ட ஒரு பெண் தன்னுடைய குடும்பத்திற்காக போராடும் போராடும் கதையை மையமாகக் கொண்டது பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

   

ஏற்கனவே கோபியை வீட்டிற்கு கொண்டு வர வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஈஸ்வரி. ஏற்கனவே செழியன் மாலினியுடன் நெருக்கமாக நடந்து கொள்வது நாம் அனைவரும் அறிந்ததே. செழியன் மாலினியின் வீட்டுக்கு செல்லாததால், தற்பொழுது அடிக்கடி மாலினி செழியனின் வீட்டிற்கு ஆபீஸ் வேலை என்று கூறிக்கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி தற்பொழுது செழியனின் வீட்டிற்கு வந்த மாலினி குழந்தையை மறைத்து வைத்துக் கொண்டு அனைவரிடமும் விளையாடுகிறார்.

   

 

மாலினி குழந்தையிடம் ‘நம்ம இப்ப கண்ணாமூச்சி விளையாடலாமா?’ என கேட்டு குழந்தையை கொண்டு போய் மாடியில் ஒளித்து வைத்து விடுகிறார். இதை தொடர்ந்து ஜெனி வந்து மாலினியிடம் ‘பாப்பா எங்க?’ என்று கேட்க, ‘நான் இவங்க கிட்ட தான் கொடுத்தேன்’ என செல்வியை கைய காட்டுகிறார். செல்வி ‘சாமி சத்தியமா என்கிட்ட அவங்க கொடுக்கவே இல்ல’ எனக் கூறுகிறார்.

‘அப்ப பாப்பா எங்க போச்சு’ என்று பாக்கியலட்சுமி பதற,  வீடு முழுவதும் அனைவரும் சென்று குழந்தையை தேடுகின்றனர். ‘இப்ப என்ன செய்யறது கடவுளே’ என ஈஸ்வரி கும்பிட குழந்தையை மாடியில் இருந்து கொண்டு வருகிறார் மாலினி. பாக்கியலட்சுமி ‘பாப்பா எப்படி மேல போச்சு?’ என்று கேட்க, ‘நான் தான் சும்மா funகாக குழந்தையை கொண்டு போய் மாடியில் ஒளித்து வைத்தேன்’ என்று மாலினி கூறுகிறார்

இதை கேட்ட ஜெனி ‘சும்மா funக்காகவா?’ என்று கோபப்படுகிறார். மேலும் கோபமான பாக்கியலட்சுமி ‘நானும் பார்த்துகிட்டே இருக்கேன். உன் விளையாட்டு எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.  உன் ஆஃபீஸ் வேலை ஆபீஸோட மட்டும் இருக்கணும். இனிமேல் நீ வீட்டு பக்கம் வராத. கிளம்பு முதல்ல இங்கிருந்து’ என்று மாலினியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.. தற்பொழுது கோபத்துடன் வெளியே செல்கிறார் மாலினி. இனிமேல் தான் இருக்கிறது செழியனுக்கு கச்சேரி. பரபரப்பாக வெளிவந்த ப்ரோமோ இதோ…