“ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு ஜாக்பாட்… ஆயுஷ்மான் திட்ட உதவிகள் கிடைக்கும்… மேற்கு வங்க அரசின் அதிரடி அறிவிப்பு…!!”

By Swetha on ஆனி 15, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலத்தில் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த ‘ஆயுஷ்மான் பாரத் – பிஎம்ஜேஏஒய்’ திட்டம், அங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டம் முறைப்படி தொடங்கப்பட்டதன் மூலம், முதலமைச்சரின் முக்கிய வாக்குறுதி ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு 976 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 1.5 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அனைவருக்கும் பொதுவானது அல்ல பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டுமே இதன் பலன்கள் கிடைக்கும். மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி, ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’, ‘சிறப்பு முன்னுரிமைப் பிரிவு’ மற்றும் ‘முன்னுரிமைப் பிரிவு’ ஆகிய குறிப்பிட்ட டிஜிட்டல் ரேஷன் கார்டுகளைக் கொண்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்கள் ஆவர். எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனாளிகளின் ஆவணங்களைச் சரிபார்த்து உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே, மத்திய அரசின் காப்பீட்டுப் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும்.

   

முன்பு இருந்த மாநில சுகாதாரத் திட்டங்கள் மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட்ட நிலையில், இந்த ஆயுஷ்மான் பாரத் அட்டை மூலம் வெளிமாநிலங்களிலும் சிகிச்சைகளைப் பெற முடியும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நோயாளிகள் அதிகம் செல்லும் வேலூர் சிஎம்சி, சென்னை மற்றும் டெல்லி மருத்துவமனைகள், அப்பல்லோ, டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத் சங்கர நேத்ராலயா போன்ற முன்னணி மருத்துவமனைகளில் இதன் மூலம் பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள், நரம்பியல் அறுவை சிகிச்சை, தாய் – சேய் நலச் சேவைகள், அவசரக்கால அறுவை சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் பரிசோதனைகளுக்கான செலவுகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.