உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் 40 வயது பெண் ஒருவர், தனது 17 வயது உறவினர் சிறுவனை மிரட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி வந்த அதிர்ச்சிச்ம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இரண்டு குழந்தைகளைக் கொண்ட அந்தப் பெண், அச்சிறுவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். தற்போது அந்தப் பெண் இரண்டு மாதக் கர்ப்பமாக இருக்கும் நிலையில், இச்சம்பவம் வெளியில் தெரிந்து சிறுவன் கடுமையான உடல் மற்றும் மனநல பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைனர் சிறுவனை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அந்தப் பெண் மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
