டாஸ்மாக் பிரியர்களே உஷார்!… பாட்டில் விலை உயருகிறதா?… நிதிச் செயலாளர் கொடுத்த ஷாக் நியூஸ்…!!

By Gayathri on ஆவணி 7, 2026

Spread the love

தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் வரி மூலமாக கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்த நிலையில், நடப்பாண்டில் அது ரூ.56 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், மதுபானங்களின் விலை உயருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஆட்சி அமைந்த நாள் முதலே பல்வேறு துறைகளைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவோம் எனக் கூறி வருகிறது. குறிப்பாக, டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10-ஐ அரசின் கஜானாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அமைச்சர்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதைய பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விடக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ரூ.1.73 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வாங்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய நிதித்துறை செயலாளர், மாநில அரசின் கடன் அளவை 3 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் எனக் குறிப்பிட்டார். இருப்பினும், மின்சாரத் துறையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் மேம்படுத்தவும் அதிக முதலீடு தேவைப்படுவதால், கூடுதல் கடன் வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதாகவும், இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்குமா என்பது சந்தேகமாகவே உள்ளதாகவும் அவர் விளக்கினார்.

   

சமீபத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவித்தது. ஆனால், அக்கடைகள் மூடப்பட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் மற்றும் விவரங்கள் இதுவரை முறையாக வெளியிடப்படவில்லை. ஒருபுறம் 717 மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு, மறுபுறம் நடப்பாண்டில் டாஸ்மாக் மூலம் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என தமிழக அரசு திட்டமிட்டிருப்பது முரண்பாடாக உள்ளதாகக் கருதும் மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இது தற்போது கடுமையான விவாதமாக மாறியுள்ளது.