இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களுடைய ஓய்வு காலத்தை முன்கூட்டியே திட்டமிட நினைக்கின்றனர். அதாவது கடைசி காலத்தில் பண நெருக்கடி இல்லாமல் யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்காமல் வாழத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கு அடல் பென்ஷன் யோஜனா திட்டம் உதவியாக இருக்கும். மத்திய அரசின் ஆதரவுடன் கூடிய இந்த ஓய்வூதிய திட்டம் நிதி சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான விதிவிலக்கான வாய்ப்பை வழங்குகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை நிலையான ஓய்வூதியத்தை பெற முடியும். மேலும் 10 ஆயிரம் ரூபாய் கூட்டு பென்ஷன் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இணைவதற்கான பலன்கள், தகுதிகள் மற்றும் படிப்படியான செயல்முறை ஆகியவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் தம்பதிகள் தங்கள் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் ஒரு சிறந்த வாய்ப்பை மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வழங்கும். கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தனி நபர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியத்தை வழங்குகின்றது. 18 முதல் 40 வயது உடைய அனைத்து குடிமக்களுக்கும் இது ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது.
சந்தாதாரரின் வயது மற்றும் பங்களிப்புகளை பொறுத்து ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையான நிலையான மாதாந்திர ஓய்வூதியத்திற்கு இந்த திட்டம் உத்தரவாதம் வழங்குகின்றது. தம்பதிகளுக்கு தனித்தனியாக பதிவு செய்தால் மாதாந்திர ஓய்வூதியமாக 10 ஆயிரம் ரூபாய் பெற முடியும். கணவன் மனைவி இருவரில் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தால் மற்றவர் ஓய்வூதியத்தை பெறலாம். இருவரும் மறைந்து விட்டால் நாமினிக்கு பென்ஷன் பலன்கள் கிடைக்கும். இதை குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குகின்றது.
மேலும் இந்த திட்டத்தில் இளையவர்களுக்கான பங்களிப்புகள் மாதத்திற்கு 42 ரூபாய் முதல் தொடங்குகின்றது. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர தனிநபர்கள் பதிவு செய்யும்போது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சேமிப்பு கணக்கு செயலில் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பங்களிப்பு செய்ய வேண்டும். ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண் ஆகியவை அவசியமாகும். எனவே குறைந்த முதலீட்டில் அதிக பயன்பெற விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
