“அவரை சும்மா விடக்கூடாது”…. செந்தில் பாலாஜி மீது செம கடுப்பில் விஜய்…. லஞ்ச ஒழிப்புத்துறை கையில் ரகசிய வாக்குமூலம்….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பல வழக்குகளில் சட்டப் பூட்டு இறுக்கப்பட்டு வரும் சூழலில், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்குச் சென்றிருந்தபோது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் பல உயிர்கள் பலியானதன் பின்னணியில், ஆளும் தரப்பின் அரசியல் சதி இருப்பதாக தவெகவினர் கடுமையாக நம்புகின்றனர். இதன் காரணமாக செந்தில் பாலாஜி மீது தவெக மேலிடம் மிகுந்த கோபத்தில் இருப்பதுடன், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலப்பாட்டிலும் உள்ளது. ஏற்கனவே தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வரும் நிலையில், அடுத்தடுத்த சட்ட நடவடிக்கை அவர் மீது பாயத் தொடங்கியுள்ளது.

மற்றொருபுறம், டாஸ்மாக் நிதி முறைகேடு, மதுபானக்கூட உரிமங்கள் வழங்குதல் மற்றும் போக்குவரத்து டெண்டர்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகச் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை இரகசிய இடத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கிலும் செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அவருக்கு எதிரான சட்ட நெருக்கடிகளும் அரசியல் அழுத்தங்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.