என்னது.. ஐஸ்வர்யா ராய் – அமிதாப் பச்சன் விவாகரத்தா…?  இணையத்தில் வெளியான புகைப்படத்தால் எழுந்த கேள்வி…

By Begam

Updated on:

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து, இருவீட்டர் சம்மதத்துடன் 2007ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யாபச்சன் என்று மகள் உள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவர். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

 

   

இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடைந்தது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் முன்னணி ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மகளையும் இயக்குனர் மணிரத்னமே ஹீரோயினாக அறிமுகப்படுத்த உள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சன் இவர்களை பற்றி அடிக்கடி விவாகரத்து சர்ச்சை எழுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. தற்பொழுது பாலிவுட் பயில்வான் ரங்கநாதனாக இருக்கும்,உமர் சந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து பேசியுள்ளார். தற்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு ஊடக நிகழ்வில் காணப்பட்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதனால் ரசிகர்களும் கவலையடைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலரோ கையில் மோதிரம் இல்லை என்றால் விவாகரத்து என்று அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது உண்மை என்பது அபிஷேக் பச்சன் சொல்ல போகும் பதிலில் தான் உள்ளது. தக்க பதிலடி கொடுத்து பரவும்  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார் அபிஷேக் பச்சன் என ரசிகர்கள் தற்பொழுது கூறி வருகின்றனர்.