தமிழக திருக்கோயில்களின் அறங்காவலர்களை நியமிக்கும் 7 பேர் கொண்ட முக்கிய குழுவில், திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து ‘தி ஜென்டில்மேன்’ யூடியூப் சேனலில் பேசிய மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பதவிகளை வழங்குவதில் தவறில்லை என்றும், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா, இங்கேயுள்ள மக்களோடும் பண்பாட்டோடும் தொடர்புடையவர்களா என்பதை ஆராய்வது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் தி.மு.க ஆட்சிகளில் ஆர்.எம். வீரப்பன், ராமநாராயணன் போன்றோருக்குப் பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், அதேபோல் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வெங்கட் நாராயணா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் சேகுவேரா குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழ்நாட்டின் முக்கிய மற்றும் அதிகாரமிக்க பதவிகளை தாரை வார்ப்பது மிகப்பெரிய தவறு என விமர்சித்துள்ளார். வரவிருக்கும் தேர்தல் காலத்தில் “தமிழினம், தமிழ் உணர்வு” என்ற தளத்தில் எதிர்கட்சிகள் இதைக் கடுமையான பிரச்சாரமாக முன்னெடுக்கும் போது, அரசால் அதற்குத் தகுந்த பதில் சொல்ல முடியாது என்றும், இது எதிர்காலத்தில் பெரிய அரசியல் எதிர்ப்பு அலையை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், அர்ச்சனா கல்பாத்தி நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழி என்பதால், இந்த நியமனத்தில் திரிஷாவின் தலையீடு இருக்குமோ என்ற தேவையற்ற வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனிடையே, அர்ச்சனா கல்பாத்தி 10 முதல் 20 கோயில்களுக்குக் கும்பாபிஷேகமும் புனரமைப்புப் பணிகளும் செய்ததால் தான் இந்தப் பதவி வழங்கப்பட்டது என்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் விளக்கத்தை “சொத்தையான காரணம்” என சேகுவேரா நிராகரித்துள்ளார். தமிழ்நாட்டில் சொந்தப் பணத்தில் அறக்கார்யங்கள் செய்த ஆயிரக்கணக்கானோருக்கு அரசு பதவிகள் வழங்கப்படாத நிலையில், இந்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
கவுரவப் பதவியாக இருந்தாலும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இடம்பெற்றுள்ள இக்குழுவில் பிரபலங்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மேலாதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே, தேவையற்ற சர்ச்சைகள் உருவான பிறகு அரசு டேமேஜ் கண்ட்ரோல் செய்வதை விட்டுவிட்டு, முன்கூட்டியே இத்தகைய விவகாரங்களைத் தவிர்க்க வேண்டும். இனிமேலாவது கவுரவப் பதவிகளையும் வாரியத் தலைவர் பதவிகளையும் வழங்கும்போது, அரசு மிகவும் சுதாரிப்பாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும் என்பதே அவரது முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…