தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். சமீப காலமாகவே தன்னுடைய அப்பாவுடன் பல மேடைகளில் தோன்றி வருகிறார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது பற்றி சில சர்ச்சைகளும் தொடங்கியது. ஆனால் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். தங்கள் மீது பொய் சேதி பரப்பியவர்கள் அனைவரையும் எச்சரித்தனர். தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு ஓய்ந்து உள்ளது.
இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதிலிருந்து ஒரு வருடத்திற்கு பிரேக் எடுக்க போகிறார் என்று ஒரு வதந்தி தற்போது பரவி வருகின்றது. அதை அவருடைய மகள் கதீஜா மறுப்பு தெரிவித்துள்ளார். ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறீர்கள் என்று அவர் கோபமாக கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…