BREAKING: வங்கி கணக்கில் மேலும் ரூ.2000… தமிழக அரசு செம ஹேப்பி நியூஸ்….!

By Nanthini on மாசி 28, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று கோயில் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 11 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளில் குறிப்பாக, பூசாரிகளின் குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது; அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,000 மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ₹72,000-லிருந்து ₹1.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பூசாரிகளின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்புகள், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சிறிய மற்றும் கிராமப்புற கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.