தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் பாஜகவில் கடந்த சில மாதங்களாகவே கட்சிக்குள் சில முரண்பாடுகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் இபிஎஸ் தலைமையை ஏற்றால் செங்கோட்டையனுக்கு டெபாசிட் போய்விடும் என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அண்ணாமலையும் பாஜகவை விட்டு வெளியே வருவார் என்று புகழேந்தி கூறியுள்ளார். ஆனால் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அண்ணாமலை நேற்று விளக்கமளித்திருந்தார். இப்படி இருக்கையில் புகழேந்தியின் இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
