இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் அன்னக்கிளி பட ரிலீஸின் போது நடந்த எமோஷனலான சம்பவம் ஒன்றை அந்த படத்தின் கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
அதில் “அன்னக்கிளி படம் எப்படியோ உருவாகி ரிலீஸாகிவிட்டது. ஆனால் படம் முதல் வாரத்தில் பிக்கப் இல்லை. இதனால் படம் ப்ளாப் ஆகிவிடும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டானது. இரண்டாவது வாரத்தில் படம் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டானது. மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்தார்கள்.
அப்போது ஒருநாள் நாங்கள் தியேட்டருக்கு சென்றோம். தியேட்டர்காரரிடம் படம் எப்படி போகுது என்று கேட்டோம். அவர் இன்னும் மூன்று டிக்கெட் விற்றால் ஹவுஸ்ஃபுல் மாட்டிவிடுவோம் என்றார். நான் உடனே என் பாக்கெட்டில் இருந்து காசை எடுத்து மூன்று டிக்கெட்கள் வாங்கினேன். அவர்கள் ஹவுஸ்ஃபுல் போர்டைப் போட்டார்கள். இப்படிதான் அன்னக்கிளி திரைப்படம் முதல் முதலாக ஹவுஸ்ஃபுல் ஆனது. அதன் பின்னர் 25 வாரங்கள் ஓடியது” எனப் பதிவு செய்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…