தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மனைவி முத்துக்கண்ணுவின் பிள்ளையான கவிதா விஜயகுமார் ‘கூலி’ என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய் ஹீரோவாக நடித்து சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள். ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார். தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்.
இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பும் அரவணைப்புமாக இருப்பது பார்ப்போரை பொறாமைப்பட வைக்கிறது. இவர்களில் விஜயகுமாரின் ஐந்து பிள்ளைகளில் நான்கு பேர் சினிமாவில் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் மட்டும் தான். எனவே அவரைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவர் கோகுல் கிருஷ்ணன் நின்ற மருத்துவரை 1997ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அனிதா எப்பொழுதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருப்பார். தற்பொழுது இவர் தனது வீடு பற்றிய ஹோம் டூர் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் வீட்டில் சகல வசதிகளும் இருக்கின்றன. நவீனமான அறைகள், விசாலமான பெட் ரூம், பூஜை அறை உள்ளிட்டவைகள் இருக்கின்றன. மேலும் குடும்பத்துடன் வீட்டிலேயே படம் பார்ப்பதற்கு வசதியாக திரையரங்கு வசதியும் இருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ‘அரண்மனை போல இவ்ளோ பிரம்மாண்டமா இருக்கே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…