தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவர்தான் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் வெளியான லியோ, விக்ரம், ஜெயிலர், வேட்டையன் மற்றும் ஜவான் என அனைத்து வெற்றி படங்களிலும் அனிருத் முக்கிய ஒருவராக இருந்துள்ளார். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகின்றார். அனிருத் இசையில் வரும் பாடல்கள் படங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

அனிருத் 2011 ஆம் ஆண்டு வெளியான வை திஸ் கொலவெறி பாடல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு 2014 ஆம் ஆண்டு விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார். அனிருத் இதுவரை இரண்டு பிலிம் பேர் விருதுகள், 9 சைமா விருதுகள் மற்றும் ஆறு எடிசன் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். அதே சமயம் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். இப்படியான நிலையில் லப்பர் வந்து திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டு உருவாகுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தை முடித்த கையோடு தமிழரசன் பச்சமுத்து இயக்கம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் முதல் முறையாக அனிருத் கிராமத்து கதைக்கு இசையமைக்க போகிறார்.

ஏற்கனவே கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் முதல் முறையாக கிராமத்து கதைக்கு இசையமைக்கும் போது இதெல்லாம் செட் ஆகுமா என்று அனைவரும் யோசித்த நிலையில் தனது இசையால் அனைவரையும் வியக்க வைத்தார். அவரைத் தொடர்ந்த தற்போது அனிருத் புதிய முயற்சியை கையாளும் நிலையில் இது அவருக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
