#image_title
பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் தமிழ் மற்றும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராக் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அனிருத் இசையில் கடைசியாக ஜவான், லியோ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது.
இந்த படங்கள் மூலம் சினிமாவின் உச்சிக்கு சென்றார் அனிருத். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். பல பெரிய நடிகர்களின் படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்கிறார். இந்நிலையில் அனிருத் முதலீட்டிலும் களமிறங்கி விட்டார். இந்நிலையில் அனிருத் வி.எஸ் மணி அண்ட் கோ என்ற தென்னிந்திய பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும், இணை நிறுவனராகவும் அனிருத் பதவி வகிக்கிறார். இந்த நிறுவனம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சோசியல் மீடியா மூலம் தென்னிந்தியாவில் இருக்கும் இளைய தலைமுறையினரை கவரும் நோக்கத்தோடு களமிறங்கியுள்ளது. பாரம்பரிய பில்டர் காபி தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும்.
இதனால் இளம் தலைமுறைக்கு சுவையான காபியை ரெடிமேட் முறையில் இந்த நிறுவனம் வழங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.எஸ் மணி அண்ட் கோ நிறுவனம் ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் பிரபலமானது. தென்னிந்திய காபி மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தில் அனிருத் ரவிச்சந்திரன் மட்டுமில்லாமல் ராணா டகுபதி, ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி உள்ளிட்ட பிரபலங்களும் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…
தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…
பிரபல நடிகையான அமலா புதுபாடகன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் பாதி சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதனை படத்தின்…
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் கோவை சரளா. அந்த படத்தில் அவருக்கு சிறிய…
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் அழகம் பெருமாள். இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக நடிகராக…