“20 குழந்தைகளின் உயிரைக் காக்க” தன்னுயிரைத் தந்த தியாகத்தாய்.. தேனீத் தாக்குதலில் வீரமரணமடைந்த அங்கன்வாடி ஊழியர் கஞ்சன் பாய்..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டம் ரன்பூர் கிராமத்தில், அங்கன்வாடி சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்த கஞ்சன் பாய் மேக்வால் (40), சுமார் 20 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார். அங்கன்வாடி மையத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது திடீரென ஒரு தேனீக் கூட்டம் பாய்ந்தபோது, கஞ்சன் பாய் சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த தார்ப்பாய்கள் மற்றும் பாய்களைக் கொண்டு குழந்தைகளை முழுமையாக மூடிப் பாதுகாத்தார்.

குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பான அறைக்குள் செல்வதை உறுதி செய்யும் வரை, அவர் தேனீக்களிடமிருந்து நகரவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தேனீக்கள் அவரைத் தொடர்ந்து கொட்டியதில் அவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு ஒரே வாழ்வாதாரமாக இருந்த கஞ்சன் பாயின் இந்த வீரச் செயலை நாடு முழுவதும் நெகிழ்ச்சியுடன் போற்றி வருகிறது.
Soundarya

Recent Posts

மீண்டும் ஒர்க் ஃப்ரம் ஹோம்! பிரதமர் மோடியின் அதிரடி அட்வைஸ்.. “எங்க மேனேஜர் கிட்ட நீங்களே சொல்லிடுங்க” கதறும் நெட்டிசன்கள்..!!

இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும்…

10 seconds ago

“என் மகனை இழந்த வலி இன்னும் ஆறல” ஆனா விஜய் CM ஆக பதவியேற்றது.. கரூர் சம்பவத்தில் குழந்தையை இழந்த தந்தையின் உருக்கமான பேட்டி..!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி,…

3 minutes ago

மும்பையில் அதிர்ச்சி..! கட்டுமானப் பணி அருகே கோர விபத்து.. ஆட்டோ மீது விழுந்த ராட்சத மரம்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…!

மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு…

11 minutes ago

ஈரானின் ‘அமைதி’ ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த டிரம்ப்.. “இனி அவர்கள் சிரிக்க மாட்டார்கள்” நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க…

17 minutes ago

ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த CM விஜய்..! ஓடி வந்து கட்டிப்பிடித்து வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. இதுதான் அரசியல் நாகரீகம்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…

27 minutes ago

BIG BREAKING: ஸ்டாலினை அவர் இல்லத்தில் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…

32 minutes ago