தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஆந்திர அரசு ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (இன்டர்மீடியட்) பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. சூப்பர் சிக்ஸ் என்ற திட்டத்தின் கீழ் அறிவித்த இந்த வாக்குறுதி இன்று முதல் அமலாக உள்ளது. இதற்கான மாணவர்களுடைய தாயார் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் .
இந்த திட்டத்தின் மூலமாக 67 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைய இருக்கிறார்கள். இதற்காக மாநில அரசு 8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றாம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் வருடம் சேரும் மாணவர்களுக்கு மட்டும் அவர்களுடைய பள்ளிகளை சேர்ந்த பிறகு அந்தந்த பள்ளிகளின் பதிவேடு பட்டியலின் அடிப்படையில் அவர்களுடைய தாயாருக்கு 15,000 பின்னர் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
வீட்டில் எத்தனை பேர் படித்தாலும் அனைவருக்கும் 15000 வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்க வேண்டும். பள்ளிகளில் 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் வருவாய் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…