மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கல்வி உதவித்தொகை வழங்கும் அரசு.. எப்படி பெறுவது?.. இதோ முழு விவரம்..!

Spread the love

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுக்கு ஏராளமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றது. ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு இது குறித்த சரியான விழிப்புணர்வு பெரிதாக இல்லை. சமூக பொருளாதார சூழலால் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி விழிப்புணர்வோடு இருப்பது கட்டாயம். அதன்படி மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா என்ற கல்வி உதவித்தொகை திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பிரதமர் உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை பொருத்தவரை வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது. 18 முதல் 25 வயது உடைய மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறையில் பயின்றவர்கள் ஊக்கத்தொகைக்கு தகுதியற்றவர்கள். 12 ஆம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை கிடைக்கும். இடை நிற்கும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தால் நீக்கம் செய்யப்படும் மாணவர்களுக்கு உடனடியாக உதவி தொகை நிறுத்தப்படும். இளங்கலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா 12000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். முதுகலை பட்டப்படிப்பு தொடர்பவர்களுக்கு தலா 20000 ரூபாய் ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

பொறியியல் போன்ற நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா 12000 மற்றும் கடைசி ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மாணவர் அல்லது மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயனுடைய வருமானச் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். இதற்கு தகுதி உள்ள மாணவ மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“வினாடிக்கு ஒரு கால்… பெண் ஊழியருக்கு ‘டெக்னிக்கல்’ டார்ச்சர்”… டிசிஎஸ்-ஸில் அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை …!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

40 seconds ago

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

6 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

14 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

20 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

27 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

1 மணத்தியாலம் ago