இளம் தலைமுறையை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கு.. திமுக அரசு இந்த பரிகாரத்தை செய்யணும்… அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

கல்வி கற்க வேண்டிய வயதில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி சீரழிவது மிகுந்த வேதனையைத் தருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், குறிப்பாக, பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவிகள் மது அருந்திய சம்பம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்வி கற்க வேண்டிய வயதில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி சீரழிவது மிகுந்த வேதனையைஏற்படுத்தியது.

அந்த மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கிக் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  இளம் தலைமுறையை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக, திமுக அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.