ராணிப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ், திமுக அரசு ஒரு “குப்பை ஆட்சி” நடத்துவதாகச் சாடினார். திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல, அது ஒரு ஜீரோ என்று குறிப்பிட்ட அவர், அதனை குப்பையில் போட வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார். மேலும், 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வாங்க திமுகவினருக்கு லஞ்சம் வழங்க வேண்டிய நிலை இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், பெண்களின் பாதத்தில் விழுந்து கேட்கிறேன், திமுகவை விரட்டியடியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்த அன்புமணி, “பாஜகவைப் பார்த்தால் ஸ்டாலினுக்கு அவ்வளவு பயமா?” என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் அவர்கள் தூக்கத்தில் கூட பாஜகவை நினைத்து பயப்படுவதாகவும், மத்திய அரசிடம் நிதி கேட்டுப் பெற அவருக்கு துப்பு இல்லை என்றும் மிகக் காரசாரமாகப் பேசினார். ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்களுக்குப் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…