விஞ்ஞானிகளே மிரண்டு போன அதிசயம்… 24,000 ஆண்டு கழித்து உயிர் பெற்ற உயிரினம்.. இனப்பெருக்கத்தையும் தொடங்கியதால் ஆச்சர்யம்…!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

சைபீரியாவின் அலசேயா (Alazeya) ஆற்றுப் படுகைக்கு அருகில், சுமார் 24,000 ஆண்டுகளாக உறைந்திருந்த மண்ணிலிருந்து Bdelloid Rotifer எனப்படும் பலசெல் நுண்ணுயிரியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டெடுத்து உயிர்ப்பித்துள்ளனர். நன்னீரில் வாழக்கூடிய இந்த நுண்ணுயிரிக்கு நரம்புகள், தசைகள் மற்றும் செரிமான மண்டலம் போன்றவை இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகக் கடுமையான குளிரையும் தாங்கி, பல்லாயிரம் ஆண்டுகள் “உயிருடன்” உறங்கும் அதன் திறன் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆய்வகத்தில் சாதகமான வெப்பநிலையில் வைக்கப்பட்டவுடன் இந்த நுண்ணுயிரி மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உயிர்த்தெழுந்த சில நாட்களிலேயே இது பாலினமில்லா இனப்பெருக்கம் (Asexual reproduction) மூலம் தனது சொந்த நகல்களை (Clones) உருவாக்கத் தொடங்கியுள்ளது. உறைந்த நிலையில் நீண்ட காலம் உயிர்வாழும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.