தமிழக பாஜகவின் மையக் குழு கூட்டம் நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. சமீபத்திய தேர்தல் தோல்வி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தற்காலிக விலகல் மற்றும் மாநிலத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இக்கூட்டத்தில் மிக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் சிலர் விலகி வருவது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், “கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகிகள் விலகல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் நானே நேரடியாகப் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் கவலைப்படாமல் களப்பணியாற்றுங்கள்” என அமித்ஷா நிர்வாகிகளுக்கு அதிரடியான முக்கிய அறிவுரைகளையும், நம்பிக்கையூட்டும் உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளார்.
