தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 10ஆம் தேதி திறனறித் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருந்தால் dgedsection@gmail.com என்ற இமெயில் மூலம் நவம்பர் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அரசு மாதம் தோறும் தலா 1500 ரூபாய் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
