துறையூரில் இபிஎஸ் பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிமுகவினாரால் தாக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, நாளை போராட்டம் நடைபெறும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருச்சி துறையூரில் அதிமுக கூட்டத்தின் போது, இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும், அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த போராட்டம் நடைபெறுவதாக தொ.மு.ச. மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
