நடிகை அமலாபால், மைனா படம் மூலம்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதற்கு முன் மலையாளத்தில் சிந்து சமவெளி என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் அந்த படம் அவரை அடையாளம் காட்டவில்லை. ஆனால் மைனா படம், பிரபு சாலமன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா போன்றவர்களின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. சிறையில் இருந்த கைதி தப்பிச் செல்வது, காதலியுடன் அவனை கைது செய்து அழைத்து வரும் போலீசார் இருவரும் விபத்தில் சிக்கும்போது, அந்த கைதியே அவர்களை காப்பாற்றுவது என மிக யதார்த்தமான கதை. படமும் பெரிய அளவில் பேசப்பட்டது.
தொடர்ந்து விஜய், தனுஷ், ஆர்யா, சித்தார்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அமலாபாய், இயக்குநர் ஏஎல் விஜயை திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக மிக விரைவில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு, ரத்னக்குமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அமலாபால் பரபரப்பை ஏற்படுத்தினார். வடக்கத்திய இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சில ஆண்டுகளுக்கு முன் புகைப்படங்கள் வைரலானது. இப்போது மீண்டும் 2வது திருமணம் செய்துக்கொண்டதாக புகைப்படங்கள் வந்து கடந்த வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகரும் செய்தியாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் இதுபற்றி பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், இயக்குநர் ஏஏல் விஜயை முறைப்படி திருமணம் செய்த அமலாபால் அவரை விட்டு பிரிந்து விட்டார். இப்போது நடந்தது 3வது திருமணம். இதற்கு முன்பு வடக்கத்திய இளைஞர் ஒருவரை அவர் 2வது திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வந்தது.
இப்போது அவருடன் வழக்கு, கேஸ் என போய்க்கொண்டு இருக்கிறது. அமலாபால் நிர்வாணமாக நடிக்கிறார். கவர்ச்சியான ஆடைகளை அணிந்து, நடனமாடும் வீடியோக்களை அடிக்கடி வெளியிடுகிறார். சினிமாவில் புதிதாக காட்ட அவரிடம் எதுவும் இல்லை. நடிப்பிலும் அவரிடம் பெரிய விஷயமில்லை. ஒரு படகில் இருந்து மற்ற படகுக்கு மாறுவது போல், கணவன்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார், என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.