CINEMA
எனக்கு சீரியல் வேண்டாம் ; என்னோட அப்பாவுக்கு கேன்சர்… முதல்முறையாக உண்மையை சொன்ன ஆலியா மானசா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆலியா மானசா. செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார் ஆலியா.
இந்த தம்பதிக்கு அய்லா என்ற பெண் குழந்தையும் ஹர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்துக்கு பின்னும், ஆலியா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த இவர் பாதியிலே வெளியேறினார். தற்போது சன் டிவியில் நடித்து வரும் ஆலியா சொந்தமாக வீடு ஒன்றும் கட்டி வருகிறாராம்.
இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை ஆலியா பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது, எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. சினிமா சினிமா என பல ஆடிசன்கள் சென்றேன். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக என் அப்பாவுக்கு கேன்சர் வந்தது. அதற்கு பணம் தேவைப்பட்டது, அப்போது தான் ராஜா ராணி சீரியலும் எனக்கு கிடைத்தது. சரி பண தேவை உள்ளது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம் என சீரியலில் நடித்தேன்.
அது என் வாழ்க்கையே மாறிவிட்டது, சீரியலுக்கு வருவதற்கு முன்பு சீரியல் எல்லாம் வேண்டாம் சினிமா தான் போகணும் என நினைத்தேன். ஆனால் விதி வேற மாதிரி உள்ளது, இப்போது தினமும் மக்கள் என்னை டிவியில் பார்க்கிறார்கள், மக்களிடம் பிரபலமாக உள்ளேன். அவர்களின் அன்பு எனக்கு கிடைக்கிறது அதுவே சந்தோசம் தான் என கூறியுள்ளார்.