தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) விலகி, சசிகலாவுடன் கைகோர்த்து மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடப்போவதாகத் தன் மீது பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என தென் இந்திய பார்வர்டு பிளாக் (SIFB) கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தங்கள் கட்சி தற்போதும் NDA கூட்டணியின் ஒரு அங்கமாகவே உறுதியுடன் நீடிப்பதாகவும், திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய வதந்திகள் கூட்டணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அடிப்படையற்ற இத்தகவல்களைக் கட்சியின் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், தொடர்ந்து தங்களின் பலம் தேசியக் கூட்டணியின் வெற்றிக்காகவே அர்ப்பணிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
