தமிழகத்தில் தற்போதைய அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிபிஐ (CPI) அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர், வீரபாண்டியன் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, தளி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள சிபிஐ-யின் ஆதரவு விஜய்க்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை நெருங்கும் நிலையில், மேலும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் தற்போது பம்பரமாகச் சுழன்று தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
