நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வுக் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், பெண்களுக்கான விடுதலை மற்றும் உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெறவேண்டும். அதற்கான கலம் தான் அரசியல். அதனால்தான் சட்டசபை தேர்தலில் சரி பாதியாக 117 இடங்களை பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி வழங்குகின்றது. போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லையே என்று வருத்தம் இருக்கலாம். களத்தில் உள்ள சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மை சமூகத்திற்கும் இடம் வழங்க வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் விமர்சனங்கள் எழும். புறக்கணிக்கப்பட்ட சமூகங்களும் உள்ளது.
அவர்களுக்கும் நாம் வாய்ப்பு வழங்க வேண்டும். ஜாதி, மதம், நிறம் பார்த்து யாரும் ஓட்டு போடக்கூடாது. ஜாதியாக நின்று இங்கு யாரும் என்றது கிடையாது. எந்த சமூகத்துடன் மற்ற சமூகமனைகின்றதோ அப்போதுதான் வெற்றி கிடைக்கும். சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். அவர்கள் அனைவருமே இளைஞர்கள் தான். தேர்தலில் சமரசம் கிடையாது. தேர்தல் கூட்டணி இல்லை. சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு. பொரியல் எல்லாம். சண்டை எல்லாம் தனித்து தான் போடுவோம் என்று சீமான் பேசியுள்ளார்.
