பூமியை நெருங்கும் பெரிய ஆபத்து… நவம்பரில் வேற்றுக்கிரகவாசிகள் படையெடுப்பு?… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல். .!

By Nanthini on ஆடி 30, 2025

Spread the love

ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது நீண்ட காலமாகவே ஒரு விவாதமாக தான் உள்ளது. ஒருவேளை ஏலியன்கள் இருக்கிறது என்றால் அவை உருவில் மற்றும் அளவில் எப்படி இருக்கும் என்பதும் ஒரு ஆய்வாகத்தான் உள்ளது. அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் எந்த ஒரு தகவலும் இல்லை. அறிவியல் பூர்வமாக இதுவரை ஏலியன் குறித்து எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் பூமியின் மீது வருகின்ற நவம்பர் மாதத்தில் மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்கம் ஏற்படுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியை நோக்கி மேன்ஹேட்டன் நகரம் அளவிலான அந்த மர்ம பொருள் ஏவப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அந்த பொருள் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கும். அந்த பொருளுக்கு விஞ்ஞானிகள் 3I/ அட்லஸ் என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த மர்ம பொருள் ஏலியன்களின் தொழில்நுட்ப உதவியுடன் பூமி மீது திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் கூறுகிறார்கள். ஏலியன்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு அதற்காக பெரும் பங்காற்றி வரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிரபல வான் இயற்பியளர் அபி லோயப் சர்ச்சைக்குரிய முரண்பாடான விஷயங்களை வெளியிட்டு வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக சூரிய குடும்பம் அல்லாத விண்கலம் ஒன்று பூமியின் அருகில் வந்ததை பற்றி குறிப்பிட்ட அவர் வேற்றுக்கிரகவாசிகளின் செயற்கையான விசாரணையில் ஒன்றாக அது இருக்கக்கூடும் என்று கூறிய போது சர்ச்சை கிளம்பியது.

   

இப்படியான நிலையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ள அந்த மர்ம பொருளானது நவம்பர் மாதம் இறுதியில் சூரியனை நெருங்கி வரும். அப்போது பூமியின் பார்வையில் இருந்து அது மறைவாக இருக்கும் என்பதால் ரகசிய அதிவிரைவான சூழ்ச்சியான விஷயங்களை அது நடத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 10 முதல் 20 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த பொருள் வினாடிக்கு 60 km வேகத்தில் நம் பூமியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. வருகின்ற செப்டம்பர் வரை தொலைநோக்கி மூலமாக பூமியிலிருந்து இதனை காணலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இது 700 கோடி ஆண்டுகள் பழமையானது. இது மணிக்கு 2.45 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடும் என்று தெரிகிறது. இது குறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நவம்பர் மாதத்தில் இதனால் ஏற்படும் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பது தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது