கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் தற்போது சிவகங்கை மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களிலும் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
