தமிழக இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ‘தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்’ அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தேர்தலில் களம் காண்பதற்கான காரணத்தை அச்சங்கம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளிப்படையாகத் தெரிவிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், ஏற்கெனவே திமுக, அதிமுக, தவெக எனப் பலமுனைப் போட்டி நிலவும் களத்தில் “நீங்களுமாப்பா போட்டிக்கு வர்றீங்க?” என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இச்சங்கத்தை ஜாலியாகவும் விமர்சன ரீதியாகவும் கலாய்த்து மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
