அது நான் நடிக்கவேண்டிய படம்… விஜய்க்கு பண்ணிட்டீங்களே- பிரபல இயக்குனரிடம் கோபித்துக் கொண்ட அஜித்!

By vinoth on ஜூலை 1, 2024

Spread the love

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து அவர் நடித்த திரைப்படம்தான் பிரியமுடன். அந்த படத்தை திரைப்பட கல்லூரி மாணவரான வின்செண்ட் செல்வா இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் க்ளைமேக்ஸில் விஜய் கதாபாத்திரம் இறப்போது போல இயக்குனர் உருவாக்கி இருந்தாராம். ஆனால் விஜய்யின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அப்படி படமாக்கவேண்டாம் என சொல்லி க்ளைமேக்ஸை மாற்றிவிட்டாராம், விஜய்யின் தந்தை SAC. அதனால் வேறு க்ளைமேக்ஸை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

   

ஆனால் அதைக் கேள்விப்பட்ட விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்தான், இந்த கதைக்கு விஜய் கதாபாத்திரம் இறப்பது போன்ற க்ளைமேக்ஸ்தான் சரியாக வரும். அதனால் நம் மகன் என்று பார்க்காமல் நீங்கள் அந்த க்ளைமேக்ஸையே எடுக்க சொல்லுங்கள் என சொல்லிவிட்டாராம். அதன் பின்னர்தான் தற்போது இருக்கும் கிளைமேக்ஸை படமாக்கியுள்ளார்கள்.

   

இந்தபடம் முடிந்து ரிலீஸ் ஆனதும் இயக்குனர் வின்செண்ட் செல்வாவுக்கு அடுத்தடுத்து ஹீரோக்களை வைத்து இயக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. அப்போது அஜித்தை சந்தித்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் வின்செண்ட் செல்வா. அப்போது அஜித் “நான் உங்கள் படம் பார்த்தேன். அந்த படம் நான் நடித்திருக்கவேண்டியது. ஏன் என்னிடம் வரவில்லை” என செல்லமாகக் கோபித்துக் கொண்டாராம்.

 

அதன் பிறகு “நாம் இணைந்து கண்டிப்பாக ஒரு படத்தில் பணியாற்றுவோம். ஆனால் என்னிடம் இப்போது கால்ஷீட் இல்லை. நான் ஒத்துக் கொண்ட படங்களை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். நீங்கள் கதை கூட சொல்லவேண்டாம்” என்று சொன்னாராம். ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லையாம். இதை வின்செண்ட் செல்வா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.