தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்ஷன் மசாலாப் படங்கள்தான். இந்த ஆண்டில் அவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் ரிலீஸாகவுள்ளன.
அஜித் சினிமாவுக்கு வந்ததே ஒரு எதிர்பாராத விபத்துதான். மோட்டார் பைக் ரேஸ்களில் ஆர்வமாக இருந்த அஜித் அதற்கான செலவுகளுக்காகவே சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனால் சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்து வெற்றிகள் அமைய அவரை நம்பி பல தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வந்தனர். அதனால் அவர் ரேஸைக் கைவிட வேண்டிய சூழல் வந்தது.
இதுபற்றி 1996 ஆம் ஆண்டு அவர் அளித்த ஒரு நேர்காணலில் பேசும்போது “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் பைக் ரேஸ் ஒரு ஹாபியாக எனக்கு இருந்தது. ஆனால் இப்போது நான் ரேஸ்களில் கலந்துகொண்டால் என் தயாரிப்பாளர்கள் என்னை சாவடித்துவிடுவார்கள்” எனக் கூறியுள்ளார். ஆனால் இப்போது அஜித் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…