தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.

ajith and shalini childhood photos
ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு அளித்த ஒரு நேர்காணலில் அஜித், தான் முதல் முதலாக ஷாலினியை சந்தித்த தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது நான் நிறைய திருட்டு தம் அடிப்பேன், பால்கனியில் நின்று தம் அடிக்கும்போது வெளியே ஏதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நான் அதைப் பற்றி விசாரித்த போது ‘சங்கர் கணேஷ்’ படத்தின் ஷூட்டிங் நடக்கிறது என்றும் அதில் பேபி ஷாலினி நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.

ajith and shalini
அதுதான் நான் அவரை முதலில் பார்த்தது. அப்போது நான் அவர்தான் எதிர்காலத்தில் என் மனைவியாக வருவார் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதன் பின்னர் அவரை அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கில்தான் முதல் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடன் அவர் மேல் எனக்குக் காதல் வந்துவிட்டது என நினைக்கிறேன். திருமணத்துக்காக அவரிடம் கேட்டு கொஞ்ச நாள் பொறுத்திருந்துதான் அவர் சம்மதம் சொன்னார்.” எனப் பேசியுள்ளார்.
